↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த ஜெயலலிதாவிற்கு நேற்று ரஜினி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். இதில் ’ நீங்கள் மறுபடியும் வந்ததில் சந்தோஷம், உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அனுப்பிய ஜெயலலிதா ‘19.10.2014 தாங்கள் எனக்கு அனுப்பிய கடித்ததை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டேன். நீங்கள் காட்டியிருந்த அன்புக்கும், கருணை பொதிந்த உணர்வுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வம் மட்டுமல்லாது தங்களது முயற்சிகளுக்கும் வெற்றி அளிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கவும்’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top