தமிழ்சினிமாவில் தவிக்க முடியாது ஹீரோக்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் தான் நடிக்க ஆரம்பித்த ஜெயம் படம் முதல் தற்போது நடிக்கும் பூலோகம் வரை படத்திற்கு பல்வேறு கடின முயற்சிகளை மேற்கொள்பவர்.
படம் ரியலாக வரவேண்டும் என்பதற்காக ரிஸ்கான விஷயங்களை சவாலாக மேற்கொள்பவர்.
இவருடைய நட்பு வட்டத்தில் ஆர்யா, விஷால், கார்த்தி , ஜீவா உள்ளிட்ட உள்ளனர். அவர்களுக்குள் ஒரு அனுசரணை இருக்கிறது.
குடும்பத்தோடு சந்திப்பதும், அவ்வப்போது தொலைபேசியில் உரையாடிக் கொள்வதும் சகஜமாகிவிட்டது. ‘எங்க செட்இது’ என்று உற்சாகமாக சொல்லிக் கொள்பவர்கள் இவர்கள்.
ஈகோவை தொலைத்துவிட்டு இனிமையாய் பழகிவரும் ஹீரோக்கள் மத்தியில் இப்போது லேசாக விரிசலா? விவகாரமா? வில்லங்கமா? ஒன்றுமே புரியவில்லை. அண்மையில் ஜெயம் ரவிஅப்படி புலம்பினாராம்.
சினிமாவில் பிரண்ட்ஷிப்புங்கறது ஒண்ணுமே இல்ல. அதெல்லாம் சும்மா.
இங்கு உயிருக்கு உயிரான நட்பெல்லாம் இல்லவே இல்லை. நானும் இப்பல்லாம் ஷுட்டிங் முடிஞ்சா நேரா வீட்டுக்கு வந்துடுறேன். குழந்தைகளோடு விளையாடறதுக்கு நிறைய நேரம் கிடைக்குது.
சந்தோஷமா இருக்கேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகர் சங்கத்திற்காக விஷால், ஆர்யா, ஜீவா, கார்த்தி நடிக்கும் படத்தில் ஜெயம் ரவிஇருக்கிறாரா என்கிற சந்தேகம் இப்போது திடீரென முளைத்திருக்கிறது கோடம்பாக்கத்தில். நடுவுல சொல்ல முடியாதளவுக்கு ஏதும் களேபரமா?
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.