↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இங்கிலாந்தில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ ஒன்று பேஸ்புக்கில் தீயாக பரவி வருகிறது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் கவுண்டியில் உள்ள பிராட் வீதியில் உள்ள சிட்டி சென்டரில் ஒரு ஹொட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த வீடியோவில், சீக்கியர் ஒருவரை ஒரு கும்பல் தாக்க தொடங்குகிறது. அந்த கும்பலில் உள்ள வெள்ளை இனத்தை சேர்ந்த ஒருவர் சீக்கியரின் முகத்தில் வெறித்தனமாக குத்துகிறார்.

இந்த தாக்குதலை தாங்க முடியாத சீக்கியர் தன் முகத்தை இரு கைகளால் மறைத்துக் கொள்கிறார்.
இந்த தாக்குதலை சுற்றி இருக்கும் பொதுமக்கள் யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
இந்த சம்பவத்தை படம் பிடித்த ஒருவர், அதை பேஸ்புக்கில் பதிவேற்ற, அந்த வீடியோ வேகமாக பரவி வருவதுடன் கண்டன கருத்துக்களையும் பெற்றுவருகிறது.

இந்நிலையில், இந்த வீடியோவைக் பார்த்த இங்கிலாந்து பொலிசார் உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளதோடு, தாக்குதலுக்குள்ளான சீக்கியர் முன்வந்து தனக்கு நடந்த அநீதியைச் சொன்னால் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய உதவியாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top