↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசம் தோல்வியடைய நடுவர்களின் மோசமான தீர்ப்பே காரணம் என்றும், ஐ.சி.சி இந்திய கிரிக்கெட் கவுன்சிலாகவே செயல்படுகிறது எனவும் முஸ்தபா கமால் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் உலகக்கிண்ண இறுதி ஆட்டம் முடிந்த பின் நடந்த பரிசளிப்பு விழாவில் ஐ.சி.சி. சேர்மன் சீனிவாசன் விதிகளுக்கு புறம்பாக உலகக்கிண்ணத்தை வழங்கியதால் சர்ச்சை வெடித்தது.
அதன் காரணமாக உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் முஸ்தபா கமால் பரிசளிப்பு விழாவை புறக்கணித்தார். அப்போது வெடித்த இந்த சர்ச்சை தற்போது ராஜினாமாவில் முடிந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிய பின், டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய முஸ்தபா கமால், ''ஐ.சி.சி. புதுப்பிக்கப்பட்ட விதியின் படி ஐ.சி.சி. தலைவர்தான் உலகக்கிண்ணத்தை வெற்றி பெற்ற அணிக்கு கொடுக்க வேண்டுமென்று விதி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்றவர்கள் கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கிரிக்கெட் அழிந்து விடும். நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்பதை ஐ.சி.சி. முழுமையாக ஆராய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
ஐ.சி.சி.யின் புதிய தலைவராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜிம் சேத்தி தெரிவு செய்யப்படுகிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top