↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரிக்க முடியாதது எது என தெலுங்கு திரையுலகில் யாரை கேட்டாலும் ராம்கோபால் வர்மாவும், அவருடைய டுவீட்டும்' என சின்ன குழந்தை கூட பதில் சொல்லும். அந்த அளவிற்கு அவர் தனது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்பவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி'யின் தெலுங்கு பதிப்பான 'ஓகே பங்காரம்' படத்தை பார்த்த ராம்கோபால் வர்மா தந்து சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'அவார்டு கமிட்டியில் உள்ளவர்கள் மம்முட்டிக்கு இதற்கு முன்னர் கொடுத்த விருதுகள் அனைத்தையும் திரும்ப பெற்று, அந்த விருதுகளை அவருடைய மகன் துல்கார் சல்மானுக்கு கொடுக்கலாம்' என்று கூறியுள்ளார்.

மேலும் "மம்முட்டி அவருடைய மகனுடன் ஒப்பிடும்போது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல தெரிகிறார் என்றும், 'இயல்பாக நடிப்பது எப்படி என்பதை மம்முட்டி அவருடைய மகனிடம் இருந்து பாடம் கற்று கொள்ளலாம்' என்ரும் தெரிவித்துள்ளார். ராம் ம்கோபால் வர்மாவின் இந்த சர்ச்சைக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top