↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அசோக் செல்வனுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருவதாக தகவல்கள் கூறுகின்ற்ன. சூதுகவ்வும், தி வில்லா, தெகிடி ஆகிய படங்களை அடுத்து, அவர் தற்போது சவாலே சமாளி, 144, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது 'கூட்டத்தில் ஒருவன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஞானவேல் இயக்கவுள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிவகார்த்திகேயன், விமல், விக்ரம் பிரபு போன்ற முன்னணி இளம் நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த ப்ரியா ஆனந்த் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்க எவ்வித தயக்கமும் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ப்ரியா ஆனந்த்துக்கு இந்த படத்தில் செம வெயிட்டான கேரக்டர் என்பதால் அவர் உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பெரிய ஹீரோ படம், சிறிய ஹீரோ படம் என்பதை பார்க்காமல் தன்னுடைய கேரக்டரின் தன்மையை பொறுத்தே படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவை ப்ரியா ஆனந்த் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

ப்ரியா ஆனந்த் நடிப்பில் விரைவில் 'வை ராஜா வை' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அவர் கவுதம் கார்த்திக்குடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top