↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்வதற்காக செய்வதுதான் பேஷியல்.
தக்காளி பேஷியல், கோல்டன் பேஷியல், பப்பாயா பேஷியல் என்று பலவகை பேஷியல்கள் இருந்தாலும் ஒயின் மற்றும் வோட்கா பேஷியல்கள் முகத்திற்கு கூடுதல் அழகு தருகின்றன.
வோட்கா பேஷியல்
வோட்கா பேஷியல் செய்வதற்காக அழகு நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் இருந்தவாறே இந்த பேஷியலை செய்யலாம், அதாவது இரவு தூங்குவதற்கு முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள்.
காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும். இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.
இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். இதை அடிக்கடி பூசிக்கொள்வதால் நாளடைவில் உங்கள் முகம் மிருதுவாவதை காணலாம்.
முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்களுக்கு இந்த பேஷியல் ஒரு சிறந்த மருந்து. வெயிலில் செல்லும் முன்பு இதை போட்டுக் கொண்டு சென்றால் சருமம் மாசுபடாமல் இருக்கும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top