↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரசிகர்களின் நெஞ்சை தொட்ட விஜய் - Cineulagam
நடிகர் விஜய் நடிப்பது மட்டுமில்லாது தனது ரசிகர்களுக்கு பல வகையில் உதவி செய்து வருவது நமக்கு தெரிந்த விஷயம். சமீபத்தில் விஜய் மூன்று ரசிகர்களுக்கு தள்ளு வண்டிகள் கொடுத்து சுய தொழிலுக்கு உதவியுள்ளார்.
அயனாவரத்தைச் சேர்ந்த ராஜேஷ், வாடகை தள்ளுவண்டியில் சாப்பாட்டுக்கடை நடத்தி வந்தார். அவருக்கு சொந்தமாக ஒரு வண்டியை வாங்கிக் கொடுத்துள்ளார் விஜய்.
தாம்பரத்தில் டிபன் கடை, இஸ்திரி கடையை ஞானம் பிரகாசமும் அவருடைய மகன் லூர்துசாமியும் வாடகை வண்டியில் நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு சாப்பாட்டுக் கடை வண்டி மற்றும் இஸ்திரி போடும் வண்டி வாங்கிக் கொடுத்துள்ளார் விஜய்.
நீலாங்கரை பகுதியிலுள்ள முருகன் என்பவர் பழம், இளநீர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவர் வண்டி பழுதடைந்து விட்டதால் வியாபாரம் செய்ய முடியாமல் கஷ்டத்திலிருந்தார்.
ரசிகர் மன்றம் மூலம் இதனைக் கேள்விப்பட்ட விஜய், உடனடியாக வியாபாரம் செய்ய தேவையான மூன்று சக்கர வண்டியை தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top