↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கொம்பன் படப்பிடிப்பின்போது தான் தங்குவதற்காக தனது நண்பர் குடும்பத்தோடு வீட்டை காலி செய்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்துள்ள கொம்பன் படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 1ம் தேதி வெற்றிகரமாக ரிலீஸானது. கொம்பன் படத்தை பார்த்தவர்கள் படம் சூப்பர் என்று சமூல வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் நடந்த கொம்பன் பட வெற்றி விழாவில் கார்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் கொம்பன் படப்பிடிப்பில் இருந்தபோது தங்குவதற்கு இடம் இல்லை. அதனால் நான் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினேன். அவரும், அவரது குடும்பத்தாரும் என்னை சிரித்த முகத்தோடு வரவேற்றனர். நான் வசதியாக தங்க வேண்டி அவர் தனது குடும்பத்தோடு வீட்டை காலி செய்து சென்னைக்கு சென்றுவிட்டார். படப்பிடிப்பு நடந்து முடியும் வரை அவர் சென்னையில் தங்கியிருந்தார். அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top