↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad லத்திகா படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடித்தவர் டாக்டர் சீனிவாசன். அதையடுத்து தனக்குத்தானே பவர்ஸ்டார் என்கிற பட்டத்தை 
சூட்டிக்கொண்டு அதை பிரபலப்படுத்தவே லட்சம் லட்சமாக செலவு செய்தார். பிறகு சந்தானம், சேதுவுடன் இணைந்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஆனால், பின்னர் அவர் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் சென்று விட்டதால், வேகமாக வளர வேண்டிய பவர்ஸ்டாரின் சினிமா பயணம் தடைபட்டது. இருப்பினும் தற்போது சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்தில் ஒரு ரோபோ வேடத்தில் காமெடியனாக நடித்திருக்கிறார் பவர்ஸ்டார்.

அவர் ஜெயிலுக்கு செல்வதற்கு முன்பே கமிட்டான படம் இது. அதோடு ஐ படம் தொடங்கப்பட்டபோதே பவர்ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம். அதனால் இப்போது இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் அவர். மேலும், தன்னை புதிய படங்களுக்காக புக் பண்ண வரும் தயாரிப்பாளர்களிடம், ஐ படம் வந்தா எனது மார்க்கெட் எகிறி விடும். அதன்பிறகு ஒரு நாள் கால்சீட்டுக்கே நான் ஒரு கோடி கேட்பேன் என்றும் பில்டப் கொடுக்கிறாராம்.

அவரது இந்த அதிரடியான பேச்சைக்கேட்டு, இதெல்லாம் நடக்கிற காரியமா? என்று உடனிருப்பவர்கள் கிண்டல் அடித்தாலும் அதை செவி கொடுத்தே அவர் கேட்பதில்லையாம். சினிமா விழாக்களுக்கு வரும்போது தன்னை மற்றவர்கள் கிண்டல் செய்து பேசுவதை எப்படி கேட்காதவர் போல் அமர்ந்திருப்பாரோ அதேபோல் எதையும் காதில் வாங்காமல் இருக்கிறாராம் பவர்.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top