↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்த கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் கூல் கேப்டன் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிளில் பெங்களூர் அணி தான் கடைசியில் உள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்துள்ள அந்த அணி இன்று சென்னை அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.


சென்னை அணியுடன் மோதும் போட்டியையொட்டி பெங்களூர் அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோஹ்லி என்ன தான் திட்டம் போட்டாலும் அதை டோணி எளிதில் தவிடுபொடியாக்கிவிடுவார் என்பதால் அந்த அணி எச்சரிக்கையுடன் விளையாட உள்ளது.

பெங்களூர் அணியில் மட்டையை அதாங்க பேட்டை கையில் எடுத்தால் ரன்களை குவிக்கும் கெய்ல் இருக்கிறார் என்றால் சென்னை அணியில் பிரன்டன் மெக்கல்லம் இருக்கிறாரே. மெக்கல்லமும், ட்வெய்ன் ஸ்மித்தும் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பேயடி அடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதன் சொந்த மண்ணில் இன்று சென்னை அணியை எதிர்கொள்கிறது. எந்த மண்ணாக இருந்தாலும் டோணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top