↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ளது ஓகே கண்மணி. காதல் கதைகளை கையாள்வதில் வல்லவரான மணிரத்னத்தின் மற்றுமொரு வெற்றிப் படைப்பு என ஓகே கண்மணியை பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், கௌதம்மேனன், அரவிந்த் சாமி, சூர்யா உள்ளிட்ட சிலரின் விமரனங்கள் இதோ...
கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மணிரத்னம் சார் மீண்டும் ஒரு ட்ரண்டை உருவாக்கியுள்ளார். எனக்கே ஒரு காதல் கதை எழுத வேண்டும் என உணர்ந்தேன்' ரெஸ்பெக்ட் சார்.
உறைய வைக்கும் விஷூவல்...
தொழில்நுட்பத்திலும் புத்திசாலித்தனம். இசை தரமாக இருக்கிறது. விஷுவல் உறைய வைக்கிறது. துல்கர் எளிமையான, கட்டுப்பாடான நடிப்புடன், நித்யா மேனன் அவருடைய பெர்ஃபார்மென்ஸால் கட்டி போடுகிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் உயிர்ப்பாக இருக்கிறது. தேர்ந்த நடிகர்கள்' என பாராட்டித் தள்ளியுள்ளார்.
இதே போல் சூர்யா, ‘நல்ல விமர்சங்களை காண்கிறேன் ‘ஓகே கண்மணி' படத்திற்கு. விரைவில் பார்ப்பேன் என நம்புகிறேன்' என டுவீட் செய்துள்ளார்.
இளவயது அதிர்வுகள்...
‘இந்தப் படத்தை பார்க்கையில் மணிரத்னத்திற்கு 25 வயது, பி.சி.ஸ்ரீராமிற்கு 22, ஏ.ஆர்.ரஹ்மானிற்கு 21. முழுமையான இள வயது அதிர்வுகளை கொண்ட ரொமாண்டிக் படம்' என இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான ரவி கே . சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சூப்பர் பெர்ஃபாமென்ஸ், ஆத்மார்த்தமான இசை, அழகான ஷாட்கள், மென்மையான ரொமாண்டிக். மாஸ்டர் எல்லா வகையிலும் நிரூபித்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அசோக் செல்வன் ‘அழகான படம், மிகவும் உண்மையாகவும், எளிமையாகவும் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பி.சி.ஸ்ரீராம் ஜீனியஸ், மணி சார் இன்னும் சிறப்பாகவே இருக்கிறார். நீண்ட காலங்களுக்கு பிறகு ஒரு தமிழ் படத்திலிருந்து சந்தோஷமாக வந்திருக்கிறேன். துல்கர் அருமை, தாரா மேல் காதலில் விழுந்து விட்டென்' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
‘மணி சார், பி.சி.ஸ்ரீராம் சார் உங்களைப் போல காதலை இவ்வளவு அழகாக வேறு யாராலும் சொல்ல முடியாது. இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள். குறிப்பாக துல்கர் சல்மான் அசத்தி விட்டார்' என பாராட்டியுள்ளார் நடிகர் ராணா.
மணிரத்னத்தின் இயக்கத்தில் ரோஜா, பம்பாய், கடல் ஆகிய படங்களில் நடித்த அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மணி சாரின் வழக்கமான அபாரமான படைப்பு. அழகான காதல் கதை. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சூப்பர்' எனப் பாராட்டியுள்ளார்.
Home
»
cinema
»
cinema.tamil
»
gvm
»
maniratnam
»
surya
» அழகோ அழகு..... மணிரத்தினத்தின் "கண்மணி"யை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!
Recent Posts
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!
ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண[...]
தமிழ்சினிமாவின் தேவதூதன் காக்காமுட்டை, பரவசப்படும் மூத்த இயக்குநர்.
விருது பெறும் படங்கள் வெகுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது என்கிற பொதுக்கருத்தை அடித்து நொறுக்கிவி[...]
நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு
ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டி[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.