↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

vijay sethupathi

திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியின் 22வதுஆண்டு விழா கல்லூரி மைதானத்தில் 28ந்தேதி நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்ட திரைப்படநடிகர் விஜய்சேதுபதி விருதும், சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தவர். பின்னர்மாணவ – மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் தந்தார்.

நடிக்க வரலன்னா என்ன பண்ணியிருப்பிங்க ?
பி.காம் படிச்சிட்டு நான் என்ன டாக்டராகவா முடியும். இதெல்லாம்ரொம்ப முக்கியமான கேள்வி பாருங்க.
ஏன் நயன்தாராவை உங்களுக்கு புடிக்கும் ?
பசங்களுக்கு எதனால புடிக்கும்மோ அதனால எனக்கு புடிக்கும். பசங்களுக்கு எதனால புடிக்கும்ன்னுஅவுங்கள கேளுங்க.
உங்களுக்கு பிடிச்ச நடிகர் ?
நான் தான்.
உங்க லவ் ஸ்டோரி ?.
அதுரொம்ப பர்சனலாச்சே. முதல் வாரம் காதலிச்சன். 5வது மாசம்கல்யாணமாகிடுச்சி. 10வது மாசம் குழந்தை பிறந்துடுச்சி.
நீங்களும் – சிவகார்த்திகேயனும் சேர்ந்து நடிப்பீங்களா?
நானும் அவரும் எம்.ஜீ.ஆர் – சிவாஜி பாருங்க. நீங்க வேற நான் நடிக்க வந்தே 4 வருஷம்தான் ஆகுது.
நீங்க தல ரசிகரா? தளபதி ரசிகரா ?.
நான் கவுண்டமணி சார் ரசிகன்.
நண்பர் முக்கியம்மா? காதலி முக்கியம்மா ?
இப்ப 19 வயசாகுது உங்களுக்கு. 10 வருஷத்துக்கு அப்பறம் நீங்க கேட்டிங்கன்னா பொண்டாட்டிதூக்கி போட்டு மிதிப்பாங்க அப்ப தெரியும் யார் முக்கியம்ன்னு.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top