↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜனவரி 8 ம் திகதிக்கு பின்னரும் தாம் இலங்கையிலேயே தங்கியிருக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
பொலநறுவையில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விமான நிலையங்களை மூடப் போவதாக எதிரணி தெரிவித்துள்ளமை குறித்து கருத்துரைத்த அவர், விடுதலைப் புலிகளுக்கு பயந்து ஓடாதவர் என்ற வகையில் இலங்கையில் இருந்து ஒடப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

எதிரணி தாமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப் போவதாக கூறுகிறது.
எனினும் தாம் வெற்றி பெற்று எதிரணியின் தேர்தல் அறிக்கையை குப்பையில் எறியப் போவதாக ஜனாதிபதி கூறினார்.

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தம்மிடம் கூறிவிட்டே சென்றார்.

எனினும் மைத்திரிபால தம்முடன் இருந்து ஒன்றாக உணவு அருந்திவிட்டு சொல்லாமலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் என்று ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top