↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
யாழ்ப்பாணத்தில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கோப்பாய் மத்தி பகுதியில் இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏ.சந்திரகுமார் (வயது 38) என்ற நபரே வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த போதே இவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் வலது கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top