↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இன்றைக்கும் தமிழ் சினிமாவில் டாப்பில் இருப்பது நயன்தாரா, ஹன்சிகாதான். 2014ம் ஆண்டில் இது கதிர்வேலன் காதல், நீ எங்கே என் அன்பே என்ற இரண்டு படத்தில்தான் நயன்தாரா நடித்தார். 

ஹன்சிகா மான் கராத்தே, அரண்மனை என்ற இரண்டு படத்தில் நடித்தார். ஆனால் 2015ம் ஆண்டில்தான் இருவருக்குமே கடுமையான போட்டி இருக்கிறது. 

காரணம் இருவர் கையிலும் கணிசமான படங்கள் இருக்கிறது. உதயநிதியுடன் ''நண்பேன்டா'', சிம்புவுடன் ''இது நம்ம ஆளு'', ஜெயம் ரவியுடன் ''தனி ஒருவன்'', சூர்யாவுடன் ''மாஸ்'', விஜய் சேதுபதியுடன் ''நானும் ரவுடிதான்''. 

தனி ஹீரோயினாக ''நைட் ஷோ'', ''பாஸ்கர் தி ராஸ்கல்'' என்ற மலையாளப்படம், பெயரிடப்படாத ஒரு தெலுங்கு படம் என நயன்தாரா கையில் 8 படங்கள் இருக்கிறது. 

அனைத்து படங்களுமே 2015ல் ரிலீசாகிறது.

ஹன்சிகாவுக்கு சிம்புவுடன் ''வாலு'', ''வேட்டை மன்னன்'', ஆர்யாவுடன் ''மீகாமன்'', விஷாலுடன் ''ஆம்பள'', ஜெயப்பிரதா மகனுடன் ''உயிரே உயிரே'', ஜெயம் ரவியோடு ''ரோமியோ ஜூலியட்'', ''இதயம் முரளி'', விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம் உள்பட 9 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படங்கள் அனைத்தும் 2015ல் வெளிவருகிறது.

ஆக நயன்தாராவும், ஹன்சிகாவும் சமபலத்துடன் 2015ல் மோதுகிறார்கள். யார் படங்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறதோ. அவர்கள் கையில் 2015 டிசம்பரில் வெற்றிக் கோப்பை இருக்கும்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top