↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த இரண்டு நாட்களாகவே கோடம்பாக்கத்தில் பல பஞ்சாயத்துகள் அரங்கேறிவிட்டன, எல்லாமே கத்தி படத்தின் ரிலீஸ்க்கு சம்பந்தமான ஒன்று என்பதனால் கோலிவுட்டின் பல முக்கிய புள்ளிகள் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தார்கள்.
 அடுத்த விநாடி என்ன நடக்கும் என்று தெரியாமல் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நமக்கும் சற்றுமுன் வந்த உறுதியான செய்திதான் இனிப்பு மிகுந்தவையாக இருக்கிறது. தனிப்பட்ட நடிகனை குறிவைத்து தாக்குவதாக நினைத்துக் கொண்டிருந்த பலர் இந்த முடிவை கேட்டதும் அவர்களின் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள்.
கத்தி படத்திலிருந்து லைக்கா என்ற பெயரை தூக்குங்க, இந்த ஒற்றை வரியைத்தான் இத்தனை மாதங்களாக கூவி கூவி கோடம்பாக்கம் முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் பல தமிழ் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் இதனால் திட்டமிட்டபடி படம் தீபாவளிக்கு வருமா என்ற சந்தேகம் நிலவி வந்த சூழ்நிலையில் படத்தின் ரிலீசில் எந்த மாற்றமும் இல்லை, தமிழ் அமைப்புகளின் கோரிக்கைப்படி லைக்கா பெயரை எடுத்துவிட்டு படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறோம் என்று ஒப்புக் கொண்டார் ஐங்கரன் கருணாகரன். 
இதனால் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்த்ததுபோல கத்தி படத்தை வருகிற புதன்கிழமை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ரிலீஸ் செய்வதிலிருந்த சிக்கல் விலகிவிட்டது. இதனை விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.
கத்தி படத்தின் ஆன்லைன் புக்கிங் நாளை காலை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top