↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad வாலன்சியா அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 2–0 என வெற்றி பெற்றது.
இதில் மெஸ்சி பார்சிலோனா அணிக்காக தனது 400வது கோலை பதிவு செய்தார்.
ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த இதன் லீக் போட்டியில் வாலன்சியா, பார்சிலோனா அணிகள் மோதின.
போட்டி துவங்கிய முதல் நிமிடத்திலேயே பார்சிலோ அணியின் சாரஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு எதிரணி வீரர்களால பதிலடி தர முடியவில்லை. இரண்டாவது பாதியில் இரு அணியும் சம பலத்தை வெளிப்படுத்தியதால், எந்த வீரரும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் கூடுதல் (90+4) நேரத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்து கைகொடுக்க, பார்சிலோனா அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பார்சிலோனா அணி சார்பில் தனது 471வது போட்டியில் பங்கேற்ற மெஸ்சி, 400வது கோலை எட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top