↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து தற்போது தயாரித்து வரும் திரைப்படம் 'இது என்ன மாயம்' விரைவில் வெளிவர இருக்கின்றது. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்க, விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ராதிகா கூறியபோது, 'எனது குடும்பத்திற்கும் சிவாஜி சார் குடும்பத்திற்கும் மூன்று தலைமுறைகளாக தொடர்பு உள்ளது. எனது தந்தை எம்.ஆர்.ராதா சிவாஜியுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். சிவாஜியின் மகன் பிரபுவுக்கு ஜோடியாக நானும் ஒருசில படங்களில் நடித்துள்ளேன். தற்போது பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்கும் படத்தை நான் தயாரித்துள்ளேன். எங்கள் இரு குடும்பத்திற்கும் இடையே உள்ள இந்த உறவு  மிகவும் அபூர்வமானது' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் குறித்து அவர் கூறியபோது, 'கீர்த்தி சுரேஷ் நடிகை ஆவதற்கு முன்பே அவரை நான் பார்லரில் அடிக்கடி பார்த்திருக்கின்றேன். பின்னர் மலையாளத்தில் ப்ரியதர்ஷன் படத்தில் அறிமுகமானபோது அவரது நடிப்பை பார்த்து வியந்துள்ளேன். சமீபத்தில் ஏ.எல்.விஜய், கீர்த்தி சுரேஷை என்னிடம் அறிமுகப்படுத்தியபோது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கீர்த்தியின் பாடி லாங்குவேஜ் மற்றும் நடிப்பு 'இது என்ன மாயம்' படத்தில் மிகவும் அற்புதமாக உள்ளது' என்றார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top