↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அருள்நிதி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'மெளன குரு' படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து இந்தியில் 'அகிரா' என்ற படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு பிசியான சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

சாலையில் உட்கார்ந்து மாணவர்கள் போராட்டம் செய்யும் காட்சியில் நடித்த சோனாக்ஷி சின்ஹா, அங்கு குவிந்த பெரும் கூட்டத்திற்கு நடுவிலும், படக்குழுவினர் செய்த கண்ணீர்ப்புகைக்கு நடுவிலும், எவ்வித சிரமமும் இன்றி நடித்து கொடுத்ததாக படக்குழுவினர் பாராட்டினர்.

இந்த காட்சி மிகவும் இயல்பாக வரவேண்டும் என்பதற்காக மும்பை கார்ப்பரேஷனில் உரிய அனுமதி பெற்று பிசியான சாலையில் படமாக்கப்பட்டதாக படக்குழுவினர்களால் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சோனாக்ஷி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது, 'இந்த படத்தின் முதல் ஆக்ஷன் காட்சியில் நடித்தது உடலுக்கு மிகவும் களைப்பாக இருந்தாலும் உள்ளத்திற்கு உற்சாகமாக இருந்தது. இதுபோன்ற வித்தியாசமான அனுபவத்தை இதுவரை நான் திரையுலகில் பார்த்ததில்லை' என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'அகிரா' படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ராய்லட்சுமி இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top