↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

யாமிருக்க பயமே, பிசாசு, அரண்மனை, டார்லிங் என பேய்ப்படங்கள் தொடர்ச்சியாக கோலிவுட்டில் வெற்றி பெற்று வருகின்றன. மேலும் வரும் 17ஆம் தேதி ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா 2' திரைப்படமும் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் அருள்நிதி நடித்த 'டிமாண்டி காலனி' திரைப்படத்தின் மிரட்டும் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படமும் மிக விரைவில் பேய்ப்பட வெற்றி படங்களின் வரிசையில் சேரும் என்பதை அந்த படத்தின் டிரைலரே உறுதி செய்துள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

19ஆம் நூற்றாண்டில் டிமாண்டி காலனியில் உள்ள பங்களாவில் குடியிருந்த ஒருவர், அந்த வீட்டில் வாழ்ந்த ஒவ்வொருவரையும் ஈவு இரக்கமில்லாமல் சுட்டு கொலை செய்ததாகவும், அந்த ஆவிகளிடம் அருள்நிதி மற்றும் அவரது நண்பர்கள் மாட்டி கொண்டு அதில் இருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பதுதான் கதை என்றும் கூறப்படுகிறது.

'மெளன குரு, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படங்களை அடுத்து அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் டிமாண்டி காலனி. சென்னையின் ஒரு பகுதியான டிமாண்டி காலனியில் பெரும்பகுதி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கிட்டார் மேதை கீபா ஜெராமியா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் பிரபல காமிரா மேதை சந்தோஷ் சிவனின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சந்தோஷ் சிவன் ஆகிய இரண்டு மேதைகளின் உதவியாளர்கள் இணைந்துள்ள இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றிப் படமாக அமையும் என எதிரபார்க்கப்படுகிறது. இந்த படத்தை மோகனா மூவீஸ் மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top