↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சமீபத்தில் ரிலீஸான மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இதுவரை மலையாளத்தில் மட்டுமே மார்க்கெட் பெற்று வந்த துல்கார் சல்மான் தற்போது கோலிவுட்டிலும் சொல்லிக் கொள்ளும்படியான ஸ்டாராக மாறிவிட்டார். 

சமீபத்தில் பிரபல சினிமா பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த துல்கார் சல்மான், 'ஓகே கண்மணி' படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது இயக்குனரிடம் கதை குறித்து ஒரு வார்த்தை கூட நான் கேட்கவில்லை. அவருடைய ஸ்கிரிப்டில் முழு நம்பிக்கை வைத்து கதை கேட்காமலேயே நடித்தேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதையே தற்போதைய வெற்றி நிரூபித்துள்ளது' என்று கூறியுள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இதேபோன்ற காதல் கதையில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது என்றும் கதையை கவனமாக தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஓகே கண்மணி இரண்டாவது வாரமாக உலகம் முழுவதும் நல்ல வசூலை தந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த வெள்ளியன்று குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் ஓகே கண்மணி, காஞ்சனா 2 ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி நடைபோட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top