
கமலின் அடுத்த படத்துக்கு ஒரே இரவு என்று தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் ராஜாவுக்குப் பிறகு இந்தப் படத்தில் கமலுடன் இணைகிறார் பிரகாஷ் ராஜ்.
வசூல் ராஜாவுக்குப் பிறகு இந்தப் படத்தில் கமலுடன் இணைகிறார் பிரகாஷ் ராஜ்.
கமல் நடித்துள்ள ‘உத்தமவில்லன்’ மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்து பாபநாசமும், விஸ்வரூபம் 2-ம் வெளியாக உள்ளன. இவற்றுக்குப் பிறகு கமல் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்துக்கு ஒரே இரவு என்று தலைப்பிட்டுள்ளனர். இதில் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் பிரகாஷ் ராஜ். இந்தப் புதிய படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாக்க உள்ள புதிய படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கவுள்ளார். கமலே தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்க உள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.