↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
rajini-kamal
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மரணமடைந்து 13-நாட்கள் ஆன நிலையில், 13-ம் நாள் நினைவஞ்சலி நேற்று பிற்பகல் கடைபிடிக்கப்பட்டது.
ரஜினிக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கே.பாலச்சந்தரின் நினைவஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகுமார், ராஜேஷ், விவேக், தாமு, லாரன்ஸ், யூகி சேது, நடிகைகள் ஜெயசித்ரா, வாணி ஜெயராம், ஸ்ரீப்ரியா, மானு, குயிலி, லலிதா குமாரி, சுபா வெங்கட், தயாரிப்பாளர்கள் தாணு, பி.எல்.தேனப்பன், எடிட்டர் மோகன், இயக்குனர்கள் மணிரத்னம், சரண், விக்ரமன், வி.சேகர், சுரேஷ் கிருஷ்ணா, ஆர்.கே.செல்வமணி, ஏ.எல்.விஜய் மற்றும் பெப்சி சிவா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பாலசந்தரின் உருவப் படத்திற்கு கமல், ரஜினி, மணிரத்னம் உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய கே.பி.யின் மகள் புஷ்பா கந்தசாமி, தன்னுடைய தந்தையாரின் மேல் அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கும் திரையுலகத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். பிரபலங்கள் பலர் கலந்துகொண்டதால் ராகவேந்திரா மண்டபத்தைச் சுற்றிலும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top