↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அவரை அறிந்தால் அவர் அம்புட்டு நல்லவர் என்பார்கள் விஷயம் அறிந்தவர்கள். ஆனால் அவருக்கே தண்ணி காட்டியிருக்காராம் ஆயிரம் யானைகள் இயக்குனர். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் என்று பக்காவாக அறிவித்துவிட்டு இப்போது இன்னும் சில சீன்கள் எடுக்க வேண்டும், அதுவும் ரோட்டில் என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே ரிலீஸ் தேதியில் இருந்து பின் வாங்கிய கடுப்பில் இருந்த நடிகர் அதை ஒப்புக்கொள்ளவில்லையாம். ஏற்பாடு செய்திருந்த படப்பிடிப்புக்கும் செல்லவில்லையாம். தயாரிப்பாளர் நடிகரை சந்தித்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம். ஆனால் ரோட்டில் நடிக்க மாட்டேன் என் படத்தால் ஜனங்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை வேறு இடம் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top