↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய அணியின் துணை அணித்தலைவர் இஷாந்த் சர்மாவுக்கு வாழ்த்துக்கள்’ என தனது பேஸ்புக் பக்கத்தில் புவனேஷ்வர் குமார் அனுப்பிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து அணித்தலைவர் டோனி, திடீரென்று ஓய்வு பெற்றார். இதனையடுத்து துணை அணித்தலைவராக இருந்த கோஹ்லி அணியின் அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது, சிட்னி டெஸ்டில் யார் துணை அணித்தலைவராக இருப்பர் என்பது தான் இப்போதைய பெரிய எதிர்பார்ப்பு.
பயிற்சி போட்டியில் அணித்தலைவராக இருந்த இஷாந்த், அஷ்வின், ரஹானே என, யாராவது ஒருவர் தெரிவு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. கடைசி கட்டமாக முரளி விஜய் அல்லது ரஹானே தெரிவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நிலைமை இப்படி இருக்க, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அனுப்பிய ‘பேஸ் புக்’ செய்தியில்,‘ இந்திய டெஸ்ட் அணியின் துணை அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்ட இஷாந்த் சர்மாவுக்கு வாழ்த்துக்கள்,’ என, தெரிவித்திருந்தார்.
இதனால் பலரும் குழம்பிப் போயினர். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இந்த செய்தியை அழித்து விட்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top