லிங்கா படத்தின் பிரச்சனை என்று தான் தீருமோ தெரியவில்லை. படம் வந்த 4வது நாளே எங்களுக்கு லாபம் வரவில்லை என சில விநியோகஸ்தர்கள் பேசி வந்தனர்.
பின் எங்களுக்கு ரஜினி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறி நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதையடுத்து படத்தின் ராக்லைன் வெங்கடேஷ் பத்திரிக்கையாளார்களை சந்தித்து பேசினார்.
இதில் ‘இப்படத்தை நாங்களே வழக்கு போட்டு பப்ளிசிட்டி செய்ததாக கூறினார்கள், ரஜினி சார் படத்திற்கு எந்த விளம்பரமும் தேவையில்லை. மேலும் படத்தை தவறான தேதியில் ரிலிஸ் செய்ததாகவும் கூறியுள்ளார்கள்.
படம் பூஜை போட்ட அன்றே நாங்கள் கூறி விட்டோம், இந்த தேதியில் தான் படத்தை எடுக்கப்போகிறோம் என்று, அப்பறம் எதற்கு வாங்கினார்கள்?.
தயவு செய்து எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களிடம் பேசுங்கள், ரஜினி சாரை இதில் இழுத்து அவரது பெயரை கெடுக்காதீர்கள்’ என்று கண்ணீருடன் கூறினார்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.