அடுத்த மாதம் தொடங்கவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி மிஸ்பா-உல்-ஹக் தலைமையில் பங்கேற்கிறது.
இவர் இந்த உலகக்கிண்ண தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண தொடர் பற்றி மிஸ்பா கூறுகையில், எனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை உயர்ந்த நிலையுடன் முடிக்க ஆசைப்படுகிறேன். உலகக்கிண்ணத்தை வென்றால் அதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது.
அதனால் உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்க தயாராகும் எங்கள் அணி வீரர்களுக்கு நான் சொல்லும் தகவல் என்னவென்றால் தோல்வி குறித்து சிந்திக்காதீர்கள். உற்சாகமாக களமிறங்கி, பயமின்றி விளையாடுங்கள் என்பது தான்.
மேலும் எனது செயல்பாட்டின் மூலம் அணியின் மற்ற வீரர்களுக்கு உந்துசக்தியாகவும், ஊக்குவிப்பாளராகவும் இருக்க வேண்டும் என்பதே எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.