'அட்டகத்தி' நந்திதா வரிசையில் தமிழுக்கு வந்துள்ள இன்னொரு பெங்களூர் நடிகைதான் ஆருஷி. தமிழில், அழகன் அழகி, வேல்முருகன் போர்வெல்ஸ் போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது அடித்தளம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் அறிமுகமானபோதும் அதன்பிறகு இவருக்கு அங்கு படவாய்ப்புகள் இல்லாததால், தற்போது தமிழ், தெலுங்கில்தான் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தற்போது தமிழில் வந்தால் என்றொரு படத்தில் புதுமுக ஹீரோவுடன் நடிக்கிறார் ஆருஷி.
இந்த படத்தில் அவருக்கு அழுத்தமான கதாநாயகி வேடமாம். அது மட்டுமின்றி, இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகிறது. ஒவ்வொரு மொழிகளிலும் அங்கு பிரபலமாக இருக்கும் நடிகர்கள் நடிகைகள் நடித்தபோதும் ஹீரோ ஹீரோயின் மட்டும் மாற்றமில்லையாம்.
அதனால், ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் சந்தோசத்தில் இருக்கிறார் ஆருஷி. மேலும், இந்த படம் காதல் கதையில் உருவானபோதும் வழக்கமான காதலாக இல்லாமல் ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகிக்கொண்டிருப்பதால், இந்த படமே தன்னை இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறார். அதனால், மூன்று மொழிகளிலும் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தபோதும் அந்தந்த மொழி ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு அதற்கேற்ற பர்பாமென்ஸ் கொடுக்கும் ஆருஷி, இந்த படத்திற்காக இதுவரையில்லாத அளவுக்கு ஹோம் ஒர்க் செய்துவிட்டே கேமரா முன்பு வருகிறாராம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.