↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய அணித்தலைவர் டோனி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 0-4 என்ற கணக்கில் தோற்றிருந்த டோனி, தற்போது நடந்து வரும் தொடரையும் இழந்ததையடுத்து ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எதிரணி அணித்தலைவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை தங்கள் அணி முடிவுக்கு கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் கொண்டாடி வருகிறது.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயண தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து அணித்தலைவர் ஆண்ட்ரூ பிளின்டாப், பாகிஸ்தானின் முகமது யூசுப், இலங்கையின் ஜெயவர்த்தனே, இந்தியாவின் அனில் கும்ப்ளே, தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் ஆகியோர் தங்களது அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் அதே போன்று டோனியும் விடை பெற்றிருப்பதாக புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு நாளிதழ்கள் தங்கள் அணியை பற்றி பெருமையாக கூறி வருகின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top