↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகன் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண்.  நடிகர், இயக்குநர், எழுத்தாளர், பாடகர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலிக்கும் இவர் சமீபத்தில் அரசியல்வாதியாகவும் மாறினார். பிரதமர் மோடி தேர்தல் சமயத்தில் பவர்ஸ்டாரின் உதவியை நாடினார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆந்திராவின் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற பவர்ஸ்டாரும் ஒரு காரணம்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 1, புத்தாண்டு முதல் பவர்ஸ்டார் பவன்கல்யாண் தனது டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ஃபாலோயர்கள் இவரை பின் தொடர்கின்றனர். இவர் கணக்கை தொடங்கிய முதல் 24 மணிநேரத்தில் 90, 000 பாலோயர்கள் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பவர்ஸ்டார் தனது டுவிட்டரில் இதுவரை ஒரே ஒரு டுவிட் மட்டுமே போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய ரசிகர்களுக்காக புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்து முதல் டுவிட் போஸ்ட் செய்தார் பவன். அந்த முதல் டிவிட்டினை மட்டும் 14000 பேர் ரிட்வீட் செய்திருக்கின்றனர். மேலும் 19,000 பேர் ஃபேவரைட் செய்திருக்கின்றனர். கணக்கு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே டுவிட்டரின் ஹீரோவாகவும் மாறிவிட்டார் பவன்கல்யாண்.தென்னிந்திய நடிகர்களில் டுவிட்டர் கணக்கை ஆரம்பித்து இரு தினங்களில் இவ்வளவு சீக்கிரம் 1 லட்சத்தை தாண்டியவர் பவன் கல்யாணாகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top