↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மணிரத்னம் இயக்கும் ஓகே கண்மணி படம் "அலைபாயுதே" படத்தின் 2-ம் பாகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

"அலைபாயுதே" படம் 2000-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. மாதவன், ஷாலினி ஜோடியாக நடித்து இருந்தனர். மணிரத்னம் இயக்கினார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இதில் இடம் பெற்ற "பச்சை நிறமே பச்சை நிறமே", "சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே", "யாரோ யாரோடி", "எவனோ ஒருவன்" போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. 

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை "ஒகே கண்மணி" என்ற பெயரில் மணி ரத்னம் படமாக்குகிறார். இந்த தகவலை படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்து உள்ளார்.

அவர் கூறும்போது :-
"ஓகே கண்மணி" படத்தை "அலைபாயுதே" படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம். ஆனாலும் இந்த படத்தின் கதை புதுமையாக இருக்கும். இப்போதைய கால கட்டத்தில் ஏற்றார் போல் கதை இருக்கும். சிறந்த காதல் கதை" என்றார்.

"ஓகே கண்மணி" படத்தில் துல்சர் சல்மான், நித்யாமேனன் ஜோடியாக நடிக்கின்றனர்.
தமிழ், மலையாளத்தில் தயாராகிறது. இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமானே இசையமைக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top