↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பெரும்பாலான முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் தங்களின் படம் சம்பந்தப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை படப்பிடிப்பு சமயத்தில் மிக ரகசியமாகவே வைத்திருப்பர். படல் ரிலீஸாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஓரிரு தகவல்கள் வெளிவரும். அதுவும் படத்தின் பப்ளிசிட்டிக்காக அவர்களாகவே கொடுக்கும் தகவல்கள் தான்.

நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்றவர்களும், இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்களும் இந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருப்பர். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னரே படத்தைப் பற்றி வெளியில் பேசக்கூடாது என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போடப்படும். ஸ்பாட்டிலும் வெளி ஆட்கள் யாரும் நுழைந்துவிட முடியாது. பெரும்பாலான உதவி இயக்குநர்களுக்கு அன்றைக்குத்தான் ஷூட்டிங் எடுக்கப் போகும் காட்சி பற்றியே தெரிய வரும். ஆனால், மீடியாக்களும் ரசிகர்களும் சும்மா இருப்பார்களா? எப்பாடுபட்டாவது செய்தியையும் புகைப்படங்களையும் தேத்திக் கொண்டு வந்துவிட மாட்டார்களா என்ன?

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் அஜித்தின் 55வது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் படத்தின் தலைப்பைக் கூட உறுதி செய்யாமல் தீவிரமாக ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் மேனன். ஆனால், ‘ஆயிரம் தோட்டாக்கள்’, ‘சத்யா’ என ஆளாளுக்கு ஒரு பெயரைச் சூட்டியுள்ளனர். இந்தநிலையில், சில நாட்களாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமூக வலைதளங்களால் உடனுக்குடன் அவை பலரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன.  இதனால் எரிச்சலடைந்த கெளதம் மேனன், இந்தப் படங்கள் எப்படி வெளியே செல்கின்றன எனக் கண்டமேனிக்கு உதவி இயக்குநர்களைக் காய்ச்சி எடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top