ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். இதை ஏற்கனவே பல பத்திரிகைப் பேட்டிகளில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே உறுதிப்படுத்தி இருக்கிறார்.கத்தி படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறாரா? அல்லது அஞ்சான் படத்தில் ராஜு பாய், கிருஷ்ணா என்ற இரண்டு பெயர்களில் சூர்யா நடித்ததைப்போல் நடிக்கிறாரா? என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் ரெக்கைக் கட்டிப்பறக்கிறது.
கதிரேசன், ஜீவானந்தம் என இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு கெட்டப்பில் எந்த மாற்றமும் இல்லை என்பது ஒரு பக்கம் இருக்க, கத்தி படத்தின் க்ளைமாக்ஸில் கதிரேசன் பெயரில் வில்லன் கூட்டத்தில் ஜீவானந்தம் ஊடுருவி, வில்லன் கூட்டத்தை அழிப்பதுபோல் காட்சி உள்ளது என்ற தகவல் கசிந்ததால்தான் இப்படியொரு கேள்வி எழுந்துள்ளது.அதுமட்டுமல்ல, கத்தி படத்தில் விஜய்யின் ஒரு கெட்அப் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. தவிர, ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்ட டீஸரிலும் இரண்டு விஜய்யும் ஒரே ஃபிரேமில் தோன்றுவது போன்ற காட்சி எதுவும் இல்லை. இதை எல்லாம் வைத்தே இப்படியொரு சந்தேகம்.
அஞ்சான் படம் வெளிவருவதற்கு முன்பு, சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாகவே இயக்குநர் லிங்குசாமி கூறி வந்தார்.அஞ்சான் படம் ரிலீஸான பிறகுதான் ஒரே சூர்யாதான், இரண்டு பெயர்களில் நடித்த சஸ்பென்ஸ் தெரிய வந்தது.ஆகவே, அஞ்சான் படத்தைப் போலவே கத்தி படத்திலும் ஒரே விஜய் இரண்டு பெயர்களில் வருவது போன்ற காட்சிகள் இருக்கும் என சந்தேகம் வலுத்து வருகிறது. கத்தியில் விஜய் ஏற்றிருப்பது இரண்டு கதாபாத்திரமா? அல்லது ஒரு விஜய்யே இரண்டு பெயர்களில் தோன்றுகிறாரா? என்பதை ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு கூற மறுத்துவிட்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.