↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ரஜினியை பாஜகவுக்கு இழுக்க நடந்து வரும் முயற்சிகள் குறித்து ரஜினி தரப்பு தொடர்ந்து மெளனம் சாதித்து வரும் நிலையில் ரஜினி, பாஜக குறித்து தினசரி ஏதாவது ஒரு நியூஸ் வெளியானபடிதான் உள்ளது. லேட்டஸ்ட் நியூஸாக கருதப்படுவது, முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும், மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவும் அந்த முயற்சியில் இறங்கியுள்ளனராம். ரஜினியை பலாப்பழம் போல மொய்த்து வருகிறது பாஜக. தனது நிலை தமிழகத்தில் ரொம்பக் கேவலமாக உள்ளதை நன்றாக உணர்ந்துள்ள பாஜகவுக்கு, ஜெயலலிதா சிறைக்குப் போனது, பழம் நழுவி பாதாம்பாலில் விழுந்தது போலாகி விட்டது. உடனே படையப்பாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ரஜினிதான் பிடி கொடுப்பது போலத் தெரியவில்லை.
ஜெயலலிதா இல்லாமல் தமிழகத்தில் அரசியல் தடுமாற்றம் நிலவி வருவது உண்மை. கிட்டத்தட்ட தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. ஆட்சி நடக்கிறதா என்றும் தெரியவில்லை. திமுக அமைதி காக்கிறது. ரகசியத் திட்டங்களில் மும்முரமாகியுள்ளது. மறுபக்கம் வாய்ச் சொல் வீரர்களும், அறிக்கை அரசியல்வாதிகளும் தினசரி ஏதாவது ஒரு அறிக்கை விட்டு நாங்களும் சீனில் இருக்கோம்ல என்று காட்டிக் கொண்டுள்ளனர். அதைத் தாண்டி அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை, எதுவும் செய்யவும் தெரியவில்லை அவர்களுக்கு.
இந்த சைக்கிள் கேப்பில் புகுந்து சந்தில் சிந்து பாடத் துடிக்கிறது பாஜக. அதற்கு அது ரஜினியை மலை போல நம்பியுள்ளது. எப்படியாவது ரஜினியை நம் பக்கம் இழுத்து விட்டால் போதும், அடுத்த தேர்தலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை நம்முடைய பாக்கெட்டில் என்ற முடிவுக்கே வந்து விட்டார்கள் அவர்கள். இதற்காக பாஜக தலைவர் அமீத் ஷா முதல் தமிழக தலைவர் தமிழிசை வரை பலரும் பலமாக முயன்று வருகின்றனர்.
ரஜினியுடன், அமீத் ஷா 3 முறை போனில் பேசியுள்ளதாக கூறுகிறார்கள். அதற்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில், முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும், கர்நாடக மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவும் கூட தற்போது ரஜினியை இழுக்கும் முயற்சியில் குதித்துள்ளனராம். லிங்கா படப்பிடிப்புக்கே போய் ரஜினியை இருவரும் நேரி்ல் பார்த்து நம்ம கட்சிக்கு வந்துருங்க என்று கேட்டுக் கொண்டனராம். அவர்களுக்கு ரஜினி என்ன பதில் சொன்னார் என்பதும் தெரியவில்லை.
இதேபோல பெங்களூர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் இளவரசனும் ரஜினியை அரசியலுக்கு வருமாறு கேட்டுக் கொண்டாராம். அதற்கு ரஜினி, வெயிட் பண்ணுங்க என்று கூறினாராம். இப்படி பலரும் பல முனைகளில் வந்து முட்டி மோதியபடி இருந்தாலும் யாருக்கும் ரஜினி உறுதியான பதிலை இதுவரை தரவில்லை என்கிறார்கள். லிங்கா முடிந்த பிறகே அவர் பேசுவார் என்றும் சொல்கிறார்கள்.
Home
»
cinema
»
cinema.tamil
»
rajini
» ரஜினியை இழுக்க எதியூரப்பாவும் களத்தில் குதித்தார்... கூடவே ஈஸ்வரப்பாவும்!
Recent Posts
விஜய் படத்தை மிஸ் செய்த அஜீத் நாயகி
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷண் பணிகள் [...]
தல56 ஆடியோ, வாங்கிய பிரபல நிறுவனம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
அஜித் இன் அடுத்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டு வருகிறது.. தல56[...]
“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!
ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண[...]
தமிழ்சினிமாவின் தேவதூதன் காக்காமுட்டை, பரவசப்படும் மூத்த இயக்குநர்.
விருது பெறும் படங்கள் வெகுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது என்கிற பொதுக்கருத்தை அடித்து நொறுக்கிவி[...]
நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் வழக்கு
ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டி[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.