↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு முழுமையாக தயாராகி விட்டது. இன்று அவரது ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவரது வக்கீல்கள் தயாராக உள்ளனர் என்று தகவல்கள் வந்த நிலையில் இதுவரை மனு தாக்கல் ஆனதாக தெரியவில்லை. இருப்பினும் எப்படியும் இன்றைக்குள் மனுவை தாக்கல் செய்து விடுவார்கள் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நேற்று மூன்றரை மணி நேரம் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆலோசனை நடத்திய ஜெயலலிதாவின் வக்கீல்கள் குழு நேற்றே டெல்லி புறப்பட்டு வந்து விட்டது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் கிடைக்காவிட்டால் சுஷில் குமார் அல்லது கே.கே.வேணுகோபால் ஆஜராகலாம் என்றும் கூறுகிறார்கள். சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் யாரையும் சந்திக்க மறுத்து வந்தார் ஜெயலலிதா. நேற்றுதான் முதல் முறையாக தனது வக்கீல்களை அவர் சந்தித்தார். நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில் உள்பட 5 வக்கீல்களை மட்டும் அவர் சந்தித்தார். 

பிற்பகல் 1 மணி முதல் நாலரை மணி வரையில் அவர்கள் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினர். ஜாமீன் எடுக்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அவர்கள் ஜெயலலிதாவிடம் விளக்கினர். உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளது குறித்தும் அவர்கள் விளக்கினர். பின்னர் உரிய ஆவணங்களில் ஜெயலலிதாவிடம் கையெழுத்து பெற்ற பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இந்த சந்திப்பின்போது சசிகலா, இளவரசி ஆகியோரும் ஜெயலலிதாவுடன் இருந்துள்ளனர். ஜெயலலிதாவின் அறைக்கே நேரடியாக வக்கீல்கள் போய் அவரைப் பார்த்துப் பேசியுள்ளனர். பார்வையாளர் அறைக்கு ஜெயலலிதா வரவில்லை என்று தெரிகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து வக்கீல்கள் குழு டெல்லி விரைந்தது. இன்று மனுத் தாக்கல் செய்தால்தான் நாளை அதை விசாரணைக்கு கொண்டு வர வழி கிடைக்கும் என்பதால் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்றே தாக்கல் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top