நடிகை த்ரிஷாவும் வரவர ஒரு சின்ன குஷ்பு போலாகிவிட்டார்.
‘கருத்துச்செல்வி’ என்கிற பட்டத்தை முன்பெல்லாம் குஷ்புவுக்கு தெரிவித்து வந்த சினிமா ரசிகர்கள், அந்தப்பட்டத்தை அப்படியே த்ரிஷா பக்கமும் தள்ளிவிடுவார்கள் போலிருக்கிறது. ஏனென்றால் அவர் சொல்லும் கருத்துக்கள் அப்படி. தனக்கு பிடித்த பிடிக்காத விஷயங்களை பற்றியெல்லாம் ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளும் த்ரிஷா, அண்மையில் டில்லி வன விலங்கு பூங்காவில் புலியடித்து ஒரு சிறுவன் இறந்தானே, அந்த விஷயம் பற்றியும் கருத்து தெரிவித்திருந்தார்.
அதில் அந்த புலிக்கு எவ்வித தண்டனையும் தரக்கூடாது என்று அவர் கூறியிருந்தது பலரையும் கவலை கொள்ள வைத்தது. உண்மையில் புலிக்கு எப்படி தண்டனை தர முடியும்? ஐந்தறிவு புலியின் இடத்தில் விழுந்தது ஆறரறிவு சிறுவனின் தவறுதான் என்றாலும் இது பற்றி கருத்துக் கூறிய அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அந்த எதிர்ப்பு அடங்குவதற்குள், மது குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை கடுமையான சட்டத்தில் உள்ளே தள்ளுங்கள் என்று கூறி இன்னும் கொஞ்சம் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
இதே த்ரிஷாதான் சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆரில் நிதானம் தவறி ஆட்டம் போட்டு போலீஸ் வரைக்கும் போனவர் என்று ட்விட்டரில் கொதிக்கிறார்கள் குடிமகன்கள். நல்லதை சொன்னா நடு மண்டையில ரத்தம் வரத்தான் செய்யுது… இல்லீங்களா த்ரிஷா
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.