கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சோனாக்ஷி சிங்ஹா, அனுஷ்கா, சந்தானம், கருணாகரன் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகிவரும் படம் லிங்கா. அப்படி என்ன தான் ரஜினி சொன்னார் இந்த புது நடிகர்கள் வாயை பிளக்கும் அளவுக்கு என்றால், லிங்கா படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைப்பெற்று கொண்டிருந்தது.
அதே ஓட்டலில் படபிடிப்பின் இடைவெளியில் ரஜினி ஓய்வு எடுக்க ரூம் புக் செய்திருந்தார் தயாரிப்பாளர், அதை ரஜினியிடம் அவர்கள் கூறிய போது ரஜினி கேட்ட கேள்வி என்ன தெரியுமா…யாரை கேட்டு ரூம் புக் செய்தீர்கள், ரூம்முக்கும், ஸ்பாட்டுக்கும் அலைவதனால் வீணாக நேரம் தான் செலவாகும் என்று கூறிவிட்டு படபிடிப்பு தளத்திலேயே ஒரு ஓரமாக அமர்ந்துள்ளார்.
அதான் அவர் சூப்பர் ஸ்டார், ஒரு படம் நடிச்சு அது ஹிட் ஆனா போதுமே ஷாட் முடிந்தவுடன் கேரவனுக்கு சென்று தயாரிப்பாளர்கள் பணத்தில் ஜூஸை குடித்து உடம்பை தேர்த்துவது என்ன…??? ஃபைஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டாதான் தங்குவேன் என்று சொல்வதுமாக இருந்தால் வந்த வழியை பார்த்து போக வேண்டியது தான் கூடிய விரைவில்.
அதோடு முடிந்ததா லிங்கா படத்திறகாக டப்பிங் பேச அவர் காலை 9 மணிக்கு வந்தால் இரவு 9 மணிக்கு தான் வீட்டுக்கு போவாராம் ஒரு நாள் முழுக்க டப்பிங் பேசுவாராம், சில நடிகர்கள் காலை என்பதே 10 மணிதான் அப்புடியே பத்து மணிக்கு வந்தாலும் மாலை 6 மணிக்கு நடையை கட்டிவிடுவார்கள்.
இவர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டாரை பார்த்து பல விஷயங்களை இன்னும் கற்று கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.