↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஜெயலலிதாவை மகாராஷ்டிரா எல்லையிலுள்ள பெல்காம் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றிவிட்டால், எல்லை பிரச்சினையில் கர்நாடகாவுக்கு நியாயம் கிடைப்பதுடன் அங்கு சுற்றுலாவும் வளர்ச்சியடையும் என்று கன்னட நடிகை ஸ்வேதா பண்டிட் தெரிவித்துள்ளார். கர்நாடக-மராட்டிய எல்லையிலுள்ள பெல்காம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு மகாராஷ்டிரா மாநிலம் உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக, கன்னடர், மராட்டியர் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
பெல்காமை கர்நாடகாவின் ஒருங்கிணைந்த அங்கமாக நிலைநாட்ட, அங்கு ஒரு சட்டசபை கட்டிடத்தை உருவாக்கியது கர்நாடக அரசு. ஆண்டுக்கு ஒருமுறை அங்கு சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் வரும் நவம்பர் 1ம்தேதி, கர்நாடக மாநிலம் உதயமான தினத்தில், பெல்காமின் பெயரை, 'பெலகாவி' என்று சுத்த கன்னட பெயராக மாற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற நிலையில், எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண கன்னட நடிகை ஸ்வேதா பண்டிட் ஒரு யோசனையை தனது பேஸ்புக் ஐடியில் தெரிவித்திருந்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது: ஜெயா அம்மாவை பெலகாவியிலுள்ள ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம், அடுத்த நான்காண்டு காலத்திற்கு அங்கு சுற்றுலா துறை நன்கு வளர்ச்சியடைந்து கர்நாடக சுற்றுலா துறைக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.
பெங்களூர் சிறையில் ஜெயலலிதா இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருந்து ஒரேநாளில் வந்துவிட்டு திரும்பிவிடுகின்றனர். பெல்காம் சிறை என்றால் அவர்கள் வந்து செல்ல இரண்டு, மூன்று நாட்கள் தேவைப்படும். அப்போது அம்மாவின் தொண்டர்கள் செய்யும் செலவு நமது மாநிலத்து வியாபாரிகளுக்கு ஆதாயமாக மாறும்.
நாட்டிலுள்ள பெரும்பான்மை ஊடகங்கள் பெல்காமில் குழுமி ஜெயலலிதா குறித்த செய்திகளை ஒளிபரப்புவார்கள். இதனால் பெல்காம் கர்நாடகாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது நாட்டு மக்களுக்கு அழுத்தமாக பதியும். இதன்மூலம், வருங்காலங்களில் மராட்டியர்கள் கலாட்டா செய்தாலும், தேச மக்களும், பத்திரிகைகளும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிடுவார்கள். இவ்வாறு அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இரு மாநில பிரச்சினை என்பதால் இதில் தலையிடாமல் இருக்குமாறு அவரது நண்பர்கள் அறிவுறுத்தவே, தற்போது பேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்த கருத்துக்களை அகற்றியுள்ளார்.
Home
»
jeyalalitha
»
news
»
news.india
» ஜெயலலிதாவை பெல்காம் சிறைக்கு மாற்றினால் சுற்றுலா வளரும்: பிரபல நடிகையின் கருத்தால் சர்ச்சை
Recent Posts
முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன[...]
அப்பீலுக்கு மேலே அப்பீல்: ஜெயாவை பிடித்து உள்ளே போட முயற்சி.... பலிக்குமா முயற்சி?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதல[...]
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.