↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி வெற்றிகரமாக ரிலீஸான அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று ஊடகங்களில் மற்றும் சமூக இணையதளங்களில் வெளிவந்த பாசிட்டிவ் விமர்சனங்கள்தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது படத்தை வெற்றிப்படமாக்க உதவிய ஊடகங்களுக்கு மணிரத்னம் தனது கைப்பட ஒரு நன்றிக்கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் "அன்பு மற்றும் வெறித்தனத்துடன் நீங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களுக்கு நன்றி. இத்தனை வருட எனது கலைப்பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள். இனி வரும் காலங்களிலும் நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

துல்கார் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன், ரம்யா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணங்களாக கூறப்படுவது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்றும் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. அவர்களுக்கு மணிரத்னம் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 'ஓகே கண்மணி' ரிலீஸான மூன்று நாட்களில் தமிழகத்தில் ரூ.6.30 கோடி, அமெரிக்காவில் ரூ.2.9 கோடி, ஆஸ்திரேலியாவில் ரூ.52 லட்சம், பிரிட்டனில் ரூ.46 லட்சம் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top