↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய வீரர் ஜடேஜாவுடன் ஏற்பட்ட மோதல் என்னை உலகக்கிண்ணத் தொடரின் போது மிகவும் பாதித்தது என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை இந்திய அணி, இங்கிலாந்து சென்றிருந்த போது டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜடேஜாவைத் தள்ளிவிட்டதாக ஆண்டர்சன் மீது புகார் எழுந்தது.
பின்னர் விசாரணையில் இருவரையும் ஐசிசி விடுவித்தது. ஆனால், ஐசிசி அதன் பிறகு தன்னை கண்காணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாக ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டர்சன் கூறுகையில், "அந்த சம்பவத்துக்குப் பிறகே நான் வித்தியாசமானவனாக உணர்கிறேன். அது என்னை உலகக்கிண்ணப் போட்டிகளின் போது பாதித்தது.
இந்திய தொடரின் போது பெரிதாக அந்தச் சம்பவம் என்னை பாதிக்கவில்லை, ஏனெனில் நான் அதுவரை ஆக்ரோஷமானவானகவே இருந்தேன்.
ஆனால், உலகக்கிண்ண போட்டிகளின் போது ஐசிசி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம் என்னிடம் அதிகமாக இருந்தது.
வஹாப் ரியாஸின் அருமையான பந்துவீச்சையும் ஷேன் வாட்சனையும் பார்த்தோம். ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இயல்பான ஆக்ரோஷம் எனக்கு கைகொடுத்தது. ஆனால், உலகக்கிண்ணத்தில் சற்றே பின் வாங்கினேன், அது என்னை பாதித்தது என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top