↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று நேற்று வழிபாடு நடத்தியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.
போட்டிகளுக்காக சென்னை செல்லும் சுரேஷ் ரெய்னா, தற்போது தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கும் விசிட் அடிக்க ஆரம்பித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம், சுவாமிமலை, பட்டீஸ்வரம், நாகை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம் ஆகிய கோவில்களில் சுரேஷ் ரெய்னா இன்று பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் இந்தியா சிமென்ட் நிறுவன அதிகாரிகள் வந்திருந்தனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top