↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மணிரத்னம் இயக்கி கடந்த வெள்ளியன்று வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் வெளியான அனைத்து இடங்களில் இருந்து பாசிட்டிவ் ரிசல்ட் வந்து கொண்டிருப்பதால் துல்கார் சல்மான், நித்யாமேனன், மணிரத்னம் உள்பட படக்குழுவினர் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

'தளபதி' படத்தில் மம்முட்டியை அதிரடி ஆக்சன் தாதாவாக மிரட்டலாக காட்டிய மணிரத்னம் அவருடைய மகன் துல்கார் சல்மானை ஒரு மெல்லிய இழையோடும் காதல் கதையில் சாக்லேட் பாயாக காட்டியுள்ளார். தந்தை, மகன் என இரண்டு தலைமுறை நடிகர்களை இயக்கியுள்ள மணிரத்னம் ஒருவரால் மட்டுமே இருவரையும் வெவ்வேறு கோணங்களில் பயன்படுத்தி வெற்றி பெற வைக்க முடியும் என்று பலர் சமூக இணையதளங்களில் கருத்து கூறி வருகின்றனர். இதில் ஒரு ஆச்சரியத்தக்க விஷயம் என்னவெனில் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பதுதான்.

இந்நிலையில் ஓ காதல் கண்மணி' படத்தை நேற்று நடிகர் சூர்யா பார்த்துவிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு நிமிடம் கூட திரையில் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை. மணிரத்னம், மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான், துல்கார் சல்மான், நித்யாமேனன் எல்லோருமே தங்கள் பணியை மிக அபாரமாக செய்துள்ளனர் என்று பாராட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top