தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வரும் படத்தை பிவிபி நிறுவனம் தயாரிக்க, கார்த்தி, நாகர்ஜுனா நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியிருந்தார்.
ஆனால் திடீரென அப்படத்திலிருந்து விலகினார். இதனால் அந்நிறுவனம் ஸ்ருதி ஹாசன் மீது ஐதராபாத் கோர்ட்டில் கிரிமினல் வழக்கு போட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புது படங்களில் சுருதி ஹாசன், நடிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தது உண்மைதான். ஆனால் அதற்காக நான் முன் பணம் எதுவும் வாங்கவில்லை. கால்சீட் விவரங்களை ஒரு மாதத்துக்கு முன்பு தெரிவிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் ஏப்ரல் 2–ந்தேதி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்று மார்ச் 17–ந்தேதிதான் எனக்கு தெரிவித்தனர். அந்த நேரத்தில் நான் புலி படத்தில் பிசியாக நடித்து கொண்டு இருந்தேன்.
எனவேதான் அந்த தேதிகளில் வர இயலாது என்று கூறினேன். அதன் பிறகு பட நிறுவனத்தினர் புலி படத்தின் தயாரிப்பாளர்களிடமும் பேசினார்கள். ஆனாலும் தேதிகள் ஒதுக்க முடியவில்லை. எனவேதான் அந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் தெரிவித்தேன். கோர்ட்டில் எனக்கு எதிராக பட நிறுவனத்தினர் வழக்கு போடுவதற்கு முன்பே தமன்னாவிடம் பேசி படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டனர்.
இந்த விஷயத்தை கோர்ட்டு கவனத்துக்கு கொண்டு வராமல் மறைத்து விட்டார்கள். புது படங்களில் நான் நடிப்பதற்கு தடை உத்தரவும் பெற்று விட்டனர். அட்வான்ஸ் தராமலும் தமன்னாவை தேர்வு செய்தும் ஒப்பந்தத்தை மீறி விட்டார்கள். எனவே புது படங்களில் நான் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.