↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சொத்து பிரச்சினையில் இயக்குநர் பிரியதர்சன்–நடிகை லிசி மாறி, மாறி பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இயக்குநர் பிரியதர்சன், நடிகை லிசி ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
24 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த காதல் தம்பதியருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இதற்கிடையில்,லிசிக்கும், பிரியதர்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் லிசி மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் பிரியதர்ஷன் நேற்றுமுன்தினம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள எனது திரையரங்கில் பங்கு கேட்டு நடிகை லிசி தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நடிகை லிசி தனது வழக்கறிஞருடன் நேற்று மதியம் 12 மணியளவில் சென்று, பிரியதர்சன் சொத்தில் தனக்கு பங்கு கேட்டு புகார் மனு அளித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top