↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திமுக எம்பி கனிமொழி இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடினார்.
தனது பிறந்த நாளையொட்டி கருணாநிதி மற்றும் சகோதரரும் தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் செல்வராஜ், பூங்கோதை, முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி, சற்குண பாண்டியன், விஜயாதாயன்பன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சிஐடி இல்லத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரத்ததான வாகனத்தில் ஏராளமான திமுகவினர் ரத்ததானம் செய்தனர்.
கனிமொழியின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில், அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷங்களுடன் நேற்று போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

முன்னாள் கவுன்சிலர் ருக்மாங்கதன் ஒட்டியுள்ள போஸ்டரில், "தமிழ் இன முதல்வரின் காவிய புதல்வி" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
மேலும் கனிமொழியின் பிறந்த நாளை மனித நேய தினமாகவும் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top