↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஷங்கர் பட்டறையிலிருந்து கோலிவுட்டிற்கு அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் கார்த்திக் அடுத்து உதயநிதி வைத்து படத்தை இயக்கப் போகிறாராம். சில நாட்களுக்கு முன் உதயநிதியை சந்தித்து கதையை சொன்னாராம் கார்த்திக், கதையை கேட்ட உதயநிதி உடனே இந்த படத்தை ஒப்புக் கொண்டாராம்.
தற்போது உதயநிதி நண்பேன்டா படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் கையில் இரண்டு படங்கள் ஏற்கனவே லிஸ்டில் காத்திருக்கிறது. இயக்குநர் அஹ்மது இயக்கத்தில் இதயம் முரளி இப்படத்தில் ஹன்சிகா ஜோடியாக நடிக்கப்போகிறார், இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படம் இதில் எமி ஜாக்சன் ஜோடியாக நடிக்கப்போகிறார், ஏற்கனவே இரண்டு கதைகள் தயாராகவுள்ள நிலையில் கார்த்திக் படத்தில் இந்த வருட இறுதியில் தான் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்குள் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்துவிடுவாராம். இது ஒரு ரொமாண்டி காதல் கலந்த சமூக அக்கறையுள்ள படமாக உருவாகப்போகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top