யாழ்.நாவாந்துறை பகுதியில் இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் கடந்த வருடம் 12ம் மாதம் உருவாகியிருந்த மோதல் நிலைமை சற்றே தணிந்திருந்த நிலையில், நேற்றைய தினம் தொடக்கம் மீண்டும் இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலும் மோதல் தீவிரம் பெற்றதையடுத்து, தற்காலிக ஊரடங்கு அப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் இறுதி பகுதியில் மென்பான நிறுவனம் ஒன்று நடத்திய உதைபந்தாட்டப் போட்டியின் வெற்றியினையடுத்து, மேற்படி நாவாந்துறை பகுதியில் இரு விளையாட்டுக் கழகங்களுக் கிடையில் மோதல் உருவானது. பின்னர் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சியினால் சற்றே மோதல் தணிந்திருந்தது.
இந்நிலையில் நேற்றய தினம், மீண்டும் மோதல் மூண்ட நிலையில் இரு பகுதியினரும் நேற்றைய தினம் போத்தல்கள், கற்களை கொண்டு ஒருவருக்கொருவர் தாக்குதல் மேற்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியினை நேற்று நள்ளிரவு படையினர் சுற்றிவளைத்திருந்தனர். இதன்போது கடலில் மீன்பிடிப்பதற்குப் பாவிக்கும் டைனமைற் வெடிபொருளை, மீனவர்கள் சிலர் மோதலில் பயன்படுத்தி வெடிக்க வைத்திருக்கின்றனர்.
இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட பகுதியினர் மீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். இதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் மாலை குறித்த பகுதியில் தற்காலிக ஊரடங்குச் சட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளதுடன், அப்பகுதியில் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வீதியில் இறங்கி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அல்லது வெடிபொருட்களை வைத்து தாக்குதல் மேற்கொள்பவர்கள் மீது கண்டதும் சுடும் உத்தரவு தமக்கும், படையினருக்கும் கிடைத்திருப்பதாக பொலிஸார் இன்றைய தினம் மாலை தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.