இன்னும் இரண்டு வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் "என்னை அறிந்தால்" படம் பற்றிய செய்திகள் அண்மை நாட்களாக தொடந்து வந்தவண்ணம் இருக்கின்றன.
குறிப்பாக தற்போது ஜெயா டீவியில் போய்க்கொண்டிருக்கும் என்னை அறிந்தால் ஸ்பெஷல் நிகழ்வில் இயக்குனர் கௌதம் மேனன், பாடலாசிரியர் தாமரை, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் ரத்னம் ஆகியோர் பங்குபற்றுகின்ற நிகழ்வு போய்க்கொண்டிருக்கு.
அதில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யா கௌதமிடம்.. அஜித் ஏற்கனவே ஆஞ்சநேயா, மங்காத்தா போன்ற படங்களில் போலீசா நடித்திருக்கிறார், அதேபோல் உங்களின் காக்க காக்க, வேட்டையாடு படத்திலும் ஹீரோவுக்கு போலீஸ் கரக்டர்.. இப்படி இருக்கையில் எவ்வாறு அஜித்துக்கு போலீஸ் கரக்டர் என்ற பாணியில் கேட்க..
அதுக்கு கௌதம் "என்னை அறிந்தால்" இல் அஜித் போலீஸ் என்று நான் சொல்லவே இல்லை எண்டார்.. இது பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் குழப்பமாய்த்தான் இருக்கும்.. பார்ப்போம் பொறுத்திருந்து.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.