↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமா இயக்குனர்களில் வித்தியாசமானவர் கௌதம் மேனன், அவர் இயக்கும் அனைத்து படங்களுக்குமே கிளைமேக்ஸ் காட்சிகளை கதை போன போக்கில் உருவாக்குவது அவரது ஸ்டைல். அதோடு ஒரு படத்திற்கு இரண்டு கிளைமேக்ஸ் காட்சிகளை உருவாக்குவார் ஒன்று பாசிடிவ்வாகவும், ஒன்று நெகடிவ்வாகவும் இருக்கும்.
’காக்க காக்க’ படத்தில் திரையில் திரையிடும்போது ஜோதிகா மரணம் அடைவதுபோல கிளைமேக்ஸ் வைத்திருந்த கெளதம் மேனன், டிவிடியில் ஜோதிகா உயிர் பிழைப்பது போல கிளைமாக்ஸ் வைத்திருப்பார். அதேபோல வேட்டையாடு விளையாடு படத்திலும் ஜோதிகா மரணம் அடைவது போலவும், உயிருடன் திரும்புவது போலவும் கிளைமேக்ஸ் வைத்திருந்தார்.
சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைதாண்டி வருவாயா படத்திலும் திரைக்குள் திரையிடும் படத்தில் காதல் ஜோடிகள் சேருவது போலவும், பின்னர் உண்மையில் பிரிவது போலவும் காட்சிகள் வைத்திருப்பார். தற்போது அஜீத் வைத்து இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்’ படத்திலும் அப்படித்தானாம் முதலில் அஜித் இறுதியில் மரணம் அடைவது போன்ற கிளைமேக்ஸ் முடிவு செய்துவைத்திருந்தார்.
ஆனால் அது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம், என்னுடைய ரசிகர்கள் நான் இறப்பது போல் இருந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், அதனால் காட்சிகளை மாற்றவேண்டும் என்று வலியுறுத்தியதால் அஜித் இறப்பது போன்ற காட்சியை மாற்றி உயிருடன் இருப்பது போல் மாற்றினார்.
அஜித் இறப்பது போல் எடுக்கப்பட்ட கிளைமேக்ஸ் காட்சிகளை படம் வெளியான சில நாட்கள் கழித்து யூடூப்பில் வெளியிட உள்ளதாக செய்திகள் கிசுகிசுக்கப்படுகிறது. அதுவும் சரிதான ஒரு படைப்பாளி தன்னுடைய சுதந்திரத்தை வெளிபடுத்துகிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top